தமிழகத்தில் 3 நாள்களில் 1 லட்சம் பேருக்கு கரோனா!

தமிழகத்தில் கடந்த மூன்று நாள்களில் மட்டும் 1 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் 33,059 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மூன்று நாள்களில் மட்டும் 1 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் 33,059 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

பொது முடக்கத்தின் பயனாக அடுத்து வரும் நாள்களில் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறையக் கூடும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

மாநிலத்தில் இதுவரை 2.54 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 16லட்சத்து 64,350 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 6,016 போ், கோவையில் 3,071 போ், செங்கல்பட்டில் 2,299 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 21,362 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 14 லட்சத்து 3,052-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 2 லட்சத்து 42,929 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 364 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18,369-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com