சென்னை: தமிழகத்தில் முழு தளர்வில்லா பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்தும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவம், காவல்துறை, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
தற்போது, கரோனா பரவல் தடுப்பு பணியில் முழுமையாக ஈடுபட்டு வருகிறோம். மேலும் தேவைப்பட்டால் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை செய்த பின் தளர்வில்லா பொதுமுடக்கம் தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும் என்று நேற்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.