லட்சத்தீவில் மத்திய அரசு நியமித்த நிர்வாகியை உடனடியாக நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், லட்சத்தீகளில் புதிய விதிகளை திணிக்கும் முயற்சியை நியாயப்படுத்தி அந்தத தீவுகளின் ஆட்சித் தலைவர் (Collector) அளித்த பேட்டி அதிர்ச்சியளிக்கிறது.
ஆட்சித் தலைவர் வெந்த பண்ணில் வேலைப் பாய்ச்சுகிறார்.
மத்திய அரசு நியமித்த நிர்வாகியை உடனடியாக நீக்க வேண்டும். அவருடைய நடவடிக்கைகளுக்கு ஆதரவாகச் செயல்படும் ஆட்சித் தலைவரை உடனடியாகப் பணிமாற்றம் செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.