ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கம்பத்தில் அமைச்சர் துரைமுருகன் காரை மறித்து விவசாயிகள் மனு

முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட வந்த நீர்வள ஆதார துறை அமைச்சர் துரைமுருகன் காரை மறித்த 5 மாவட்ட விவசாயிகள் மனு அளித்தனர்.

News image
கம்பத்தில் அமைச்சர் துரைமுருகன் காரை மறித்து விவசாயிகள் மனு
Updated On :5 நவம்பர் 2021, 10:29 am

DIN


கம்பம்: முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட வந்த நீர்வள ஆதார துறை அமைச்சர் துரைமுருகன் காரை மறித்த 5 மாவட்ட விவசாயிகள் மனு அளித்தனர்.

முல்லைப் பெரியாறு அணையை தேனி மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று வெள்ளிக்கிழமை மனு கொடுத்தனர்.

முல்லைப் பெரியாறு அணையை தமிழக நீர்வள ஆதார துறை அமைச்சர் துரைமுருகன் வெள்ளிக்கிழமை பார்வையிட கம்பம் வழியாக வந்தார்.

கம்பம் கூடலூர் நெடுஞ்சாலையில் தனியார் விடுதி முன்பாக 5 மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் எஸ். ஆர். தேவர் தலைமையில் 50க்கும் மேலான விவசாயிகள் கூடியிருந்தனர்.

அமைச்சரை முற்றுகையிடப் போவதாக தகவல் கிடைத்ததும் உத்தமபாளையம் காவல் கோட்ட   உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா விவசாயிகளிடம்  கலைந்து செல்லுங்கள், மறியல் செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதற்கு விவசாயிகள் அமைச்சரை சந்தித்து மனு கொடுக்க போவதாக தெரிவித்தனர். இதனால் அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

பின்னர் அமைச்சர் வந்த காரை விவசாயிகள் சங்கத் தலைவர் தலைமையில் மறித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
மனுவில்,  பெரியாறு அணைக்கு வரும் நீர் வழித்தடங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும், பெரியாறு அணையில் தமிழக காவல்துறை பாதுகாப்பில் ஈடுபட  வேண்டும், அணை நிர்வாகம் தேனி மாவட்ட ஆட்சியரின் பொறுப்பில் வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அணைக்குச் செல்லும் தமிழக அதிகாரிகளை கெடுபிடி செய்யாமல் வல்லக்கடவு வழியாக அனுப்ப வேண்டும்,

அணை பற்றி வலைதளங்களில் தவறாக பதிவு செய்பவர்கள் மீது கேரள முதல்வர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார், அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர்.

விவசாயிகள் கொடுத்த மனுவை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டு பரிசீலனை செய்வதாக கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.