தெற்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான பின்னர் 24 மணி நேரத்தில் அது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்கக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை பெரம்பூர் பகுதியில் 14 சென்டி மீட்டர் மழை பதிவானது. செய்யூர், மதுராந்தகம், சோழவரத்தில் தலா 13 சென்டி மீட்டர் மழை பதிவாது.