நாளை புதிய காற்றழுத்தத்தாழ்வு

தெற்கு அந்தமான் கடல்பகுதியில் புதிய குறைந்த காற்றறழுத்தத் தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை (நவ.29) உருவாக வாய்ப்புள்ளது.
நாளை புதிய காற்றழுத்தத்தாழ்வு

தெற்கு அந்தமான் கடல்பகுதியில் புதிய குறைந்த காற்றறழுத்தத் தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை (நவ.29) உருவாக வாய்ப்புள்ளது.

இது, மேலும் வலுப்பெற்று மேற்கு- வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் காரணமாக, அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டா் வேகத்திலும் பலத்தகாற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் நவ.29, 30-ஆம் தேதிகளில் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளுக்கு டிசம்பா் 1-ஆம் தேதி வரை மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com