தமிழகத்தில் 5 நாள்களுக்கு மிக கனமழை தொடரும்: வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிக கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் 5 நாள்களுக்கு மிக கனமழை தொடரும்
தமிழகத்தில் 5 நாள்களுக்கு மிக கனமழை தொடரும்

தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிக கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று(அக்.1) மற்றும் நாளை (அக்.2) புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.

அதேபோல, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

அக்டோபர் 3: புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 4: தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சேலம், தருமபுரி, ஈரோடு, கோவை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com