தமிழகத்தில் புதிதாக 1,432 பேருக்கு கரோனா; 25 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,432 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 25 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் புதிதாக 1,432 பேருக்கு கரோனா; 25 பேர் பலி
தமிழகத்தில் புதிதாக 1,432 பேருக்கு கரோனா; 25 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,432 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 25 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் நேற்று 1,449 பேர் கரோனவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் சற்று குறைந்துள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை புதன் கிழமை (அக்.6) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிதாக 1,432 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 26,72,843-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு நாளில் மட்டும் 25 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,707-ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனையில் 21 பேர் உயிரிழந்தனர். தனியார் மருத்துவமனையில் 4 பேர் உயிரிழந்தனர்.

கரோனாவிலிருந்து 1,519 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,20,499-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 16,637 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும் 1,44,832 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு...

சென்னை 176, கோவை 149, செங்கல்பட்டு 110, ஈரோடு 103, திருப்பூர் 84, தஞ்சை 80, திருவள்ளூர் 57, திருவள்ளூர் 69 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com