சென்னை: தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் இது குறித்த எச்சரிக்கைத் தகவலை தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது, அக்டோபர் 19ஆம் தேதி மாலை 2.30 மணிமுதல் 4.30 மணிவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.