புதுச்சேரியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு 

நாடு முழுவதும் பாதுகாப்பு பணியின் போது வீரத்தீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில், காவலர் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
புதுச்சேரி கோரிமேடு காவலர் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவலர் அணிவகுப்பு மரியாதையை  ஏற்ற முதல்வர் என்.ரங்கசாமி.
புதுச்சேரி கோரிமேடு காவலர் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவலர் அணிவகுப்பு மரியாதையை  ஏற்ற முதல்வர் என்.ரங்கசாமி.


புதுச்சேரியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. 

நாடு முழுவதும் பாதுகாப்பு பணியின் போது வீரத்தீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில், காவலர் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

இந்த வகையில் புதுச்சேரியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. 

புதுச்சேரி கோரிமேடு காவலர் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் என்.ரங்கசாமி, உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் ஆகியோர் பங்கேற்று, காவலர் நினைவிடத்தில் மலர் தூவி காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

புதுச்சேரி கோரிமேடு காவலர் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் பங்கேற்று காவலர் நினைவிடத்தில் மலர் தூவி காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.

இதனையொட்டி நடைபெற்ற காவலர் அணிவகுப்பு மரியாதையையும், முதல்வர் மற்றும் அமைச்சர் ஆகியோர் ஏற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com