புதுச்சேரியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
நாடு முழுவதும் பாதுகாப்பு பணியின் போது வீரத்தீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில், காவலர் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
இந்த வகையில் புதுச்சேரியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
இதையும் படிக்க | நாட்டில் 18,454 பேருக்கு தொற்று: 160 பேர் பலி
புதுச்சேரி கோரிமேடு காவலர் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் என்.ரங்கசாமி, உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் ஆகியோர் பங்கேற்று, காவலர் நினைவிடத்தில் மலர் தூவி காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
புதுச்சேரி கோரிமேடு காவலர் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் பங்கேற்று காவலர் நினைவிடத்தில் மலர் தூவி காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.
இதனையொட்டி நடைபெற்ற காவலர் அணிவகுப்பு மரியாதையையும், முதல்வர் மற்றும் அமைச்சர் ஆகியோர் ஏற்றனர்.