தீபாவளி திருநாள்: அஞ்சல் நிலையம் மூலம் ரூ.30-க்கு கங்கை நீர் விநியோகம்

தீபாவளி திருநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அஞ்சல் நிலையங்களில் ரூ. 30-க்கு கங்கை நீர் விற்பனை செய்யப்படுகிறது. 
தீபாவளி திருநாள்: அஞ்சல் நிலையம் மூலம் ரூ.30-க்கு கங்கை நீர் விநியோகம்

திருவள்ளூர்: தீபாவளி திருநாளை முன்னிட்டு கங்கையில் புனித நீராடி மகிழும் நோக்கத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அஞ்சல் நிலையங்களில் ரூ. 30 என குறைந்த விலைக்கு கங்கை நீர் விநியோகம் செய்வதாகவும் பொதுமக்கள் வாங்கிப் பயன்பெறலாம் எனவும் அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

இந்திய அஞ்சல் துறையின் மூலம் புனித கங்கை நீர் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி திருநாளில் கங்கை நீரில் நீராடி பொதுமக்கள் திருநாளை கொண்டாடுவது வழக்கமாகும். அதிலும் ரூ.30 குறைந்த விலைக்கு பாட்டில் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு அஞ்சல் துறை, கங்கை நீர் விற்பனையை விரிவுபடுத்தி உள்ளது. இதுகுறித்து கோட்ட கண்காணிப்பாளர் முரளி கூறியதாவது: காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தில் 2 திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய தலைமை அஞ்சலகங்கள் மற்றும் 53 துணை அஞ்சலகங்கள் மூலம் கங்கை நீர் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் அதிக எண்ணிக்கையில் கங்கை நீர் தேவைப்படும் அடுக்குமாடிக் குடியிருப்பு நலச்சங்கம் மற்றும் ஆலயங்கள் ஆகியவற்றுக்கு நேரில் வீடுகளிலே விநியோகம் செய்யவும் இலவசமாக செய்யப்படும். அதனால், அதிக எண்ணிக்கையில் தேவைப்படுவோர் செல்லிடப்பேசி 8695809464 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com