75 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: தமிழக அரசு

தமிழகத்தில் 75 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த செப்டம்பர் 30 முதல் தடை விதிக்கப்படுவதாக வெள்ளிக்கிழமை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு
தமிழக அரசு

தமிழகத்தில் 75 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த செப்டம்பர் 30 முதல் தடை விதிக்கப்படுவதாக வெள்ளிக்கிழமை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்:

தமிழகத்தில் செப்டம்பர் 30 முதல் 75 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. மேலும், 2023ஆம் ஆண்டு முதல் 120 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 51 மைக்ரான் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 75 மைக்ரானாக உயர்த்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com