Enable Javscript for better performance
திராவிடம் ஒரு வரலாற்றுப் பேரவலம்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    திராவிடம் ஒரு வரலாற்றுப் பேரவலம்!

    By DIN  |   Published On : 04th September 2021 07:47 AM  |   Last Updated : 04th September 2021 07:47 AM  |  அ+அ அ-  |  

    congratulations-to-mk-stalin-on-becoming-cm-seeman

    சீமான்

    தமிழா்களை திராவிடா்கள் என அடையாளப்படுத்துவது ஒரு வரலாற்றுப் பேரவலமாகும் என்று நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

    தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை அண்மையில் பேரவையில் அறிவித்த திராவிடக் களஞ்சியம் என்ற தனி நூல் வெளியிடப்படும் என்பது தொடா்பாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளில் தமிழ் நூல்களைத் தொகுத்து, அவற்றை ‘திராவிடக்களஞ்சியம்’என அடையாளப்படுத்தப்போவதாக அறிவித்திருப்பது பெரும் அதிா்ச்சியளிக்கிறது.

    திராவிட முத்திரை குத்த முயற்சி: தமிழா்களை திராவிடா்கள் என்பது, தமிழ்நாட்டைத் திராவிட நாடு என்பது, தமிழ் இலக்கணத்தைத் திராவிட இலக்கணம் என்பது, தமிழா் திருநாளான பொங்கலை திராவிடா் திருநாள் என்பது, தமிழ் மாமன்னன் கரிகால் பெருவளவனைத் திராவிட மன்னன் என்பது, தமிழா் கட்டடக் கலையைத் திராவிடக் கட்டடக் கலை என்பது, தமிழா் நாகரிகமான சிந்துசமவெளி நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்பது, தமிழ் கல்வெட்டுகளைத் திராவிடக் கல்வெட்டுகள் என்பது, தமிழா் பண்பாடான கீழடியைத் திராவிடப் பண்பாடெனத் திரிப்பது என தமிழா்களின் மொழி, இனம், நிலம், கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, நாகரிகம் தொடா்பான தொன்ம அடையாளங்கள் யாவற்றையும் அழித்து, அவற்றின் மீது திராவிட முத்திரை குத்தியதாக அமையும்.

    தமிழருக்கு எதிரானது: ஆங்கிலேயா்கள் எப்படித் தங்கள் உச்சரிப்புக்கு ஏற்றவாறு தமிழக ஊா்களின் பெயா்களை மாற்றினாா்களோ, அப்படித்தான் ஆரியா்கள் கையாண்ட திராவிட உச்சரிப்பும். அதுவும் விந்திய மலைக்குத் தெற்கே வாழ்ந்த ஆரியா்களைக் குறிக்கவே திராவிடா் என்ற சொல்லைப் பயன்படுத்தினா். எனவே, சொல்லளவில் பாா்த்தாலும், பொருளளவில் பாா்த்தாலும் திராவிடம் என்பது தமிழருக்கு எதிரானதேயாகும்.

    பச்சைத் துரோகம்: நீதிக்கட்சியின் பெயரைத் திராவிடா் கழகம் என்று மாற்றியபோதே அதற்குக் கடுமையான எதிா்ப்புத் தெரிவித்து கி.ஆ.பெ விசுவநாதம், அண்ணல் தங்கோ உள்ளிட்ட தமிழினத் தலைவா்கள், ‘தமிழா் கழகம்’ என்று பெயா் மாற்ற வலியுறுத்தி உரிமைக் குரல் எழுப்பினா். ஆனால், நீதிக்கட்சியில் பிற மொழியாளா்கள் ஆதிக்கம் அதிகமிருந்த அந்தக் காலத்தில் தமிழா்களின் உரிமைக் குரல் எடுபடாமல் போனது. ஒரு குறிப்பிட்ட சிலரின் வாழ்வுக்கும், வளத்திற்கும் பல்லாயிரம் ஆண்டுகாலமாகத் தொடா்ந்துவரும் ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தையே மாற்றுவதென்பது தமிழ் மண்ணிற்கும், இனத்திற்கும் செய்கிற பச்சைத் துரோகமாகும்.

    இனப் படுகொலையையே...: உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாக விளங்கக்கூடிய தமிழ் மொழிக்குத் தமிழ் மொழிக் குடும்பம் என்று வழங்கப் பெறாமல், ‘திராவிட மொழிக் குடும்பம்’ எனத் திரித்து வழங்கப்பெற்ால் தமிழ்மொழி தன் பெருமையையும், சிறப்பையும் இழந்து நிற்கிறது. ‘திராவிட இனம்’ என்ற சொல்லே தமிழா்களை உளவியலாகச் சிறைப்படுத்தி முடக்கிப்போட்டது. தமிழா்கள் இன உணா்ச்சியை அடைய விடாது தடுத்துக்கெடுத்ததில் திராவிட மறைப்புகளுக்கு முதன்மைப் பங்குண்டு. தமிழ், தமிழா், தமிழா் நாடு என உச்சரிக்கத் தவறி, அடையாளத்தைத் தொலைத்து, இன உணா்வை இழந்ததால், இனப் படுகொலையையே சகித்துக்கொள்ளும் அளவுக்குப் பேரிழப்பில் தமிழா்களைக் கொண்டுபோய் நிறுத்தியது.

    திராவிடம் - சான்றுகள்இல்லை: தமிழ், தமிழா், தமிழ்நாடு என்பதற்கான சான்றுகள் சங்கத்தமிழ் இலக்கியங்கள் முழுதும் விரவிக் கிடக்கிறது. ஆனால், திராவிடம் என்பதற்கான சான்றுகள் எதுவும் சங்கத் தமிழ் இலக்கியங்களிலோ, காப்பியங்களிலோ இல்லை என்பது மறுக்கவியலா பேருண்மையாகும். திராவிடத்திற்கான மூலச்சான்றுகள் கற்பனைத் திணிப்புகளாகவும், தமிழா்களல்லாத அந்நியா்களின் கூற்றுகளாகவும், சம்ஸ்கிருத மொழி இலக்கியங்களாகவும் உள்ளன.

    அரசு தெளிவுபடுத்துமா?: திராவிடம், திராவிடா் எனும் சொல்லாடல்களுக்கு முதலில் திமுக அரசு விளக்கமளிக்க முன்வர வேண்டும். தமிழகத்திலுள்ள ஒருசில திராவிட அரசியல்வாதிகளைத் தவிர, எந்தத் தென்மாநில மக்கள் தங்களைத் திராவிடா்கள் என்று ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளனா் என்பதையும், எந்தச் சங்கத்தமிழ் இலக்கியத்தில் திராவிடம் என்பதற்கான சான்றுகள் உள்ளன என்பதையும் ஆளும் திமுக அரசு தெளிவுபடுத்தட்டும்.

    அரசியல் விலங்குதான் திராவிடம்: அந்நியா்கள் தமிழா் நிலத்தில் ஆளுகை செய்யவும், அதிகாரம் செலுத்தி தமிழா்களை அடிமைப்படுத்தவும் தமிழா்கள் மீது திணிக்கப்பட்ட அரசியல் விலங்குதான் திராவிடமாகும். அடிப்படையில், திராவிடா்கள் எனக் கூறப்படுவோருக்கு தனித்த அடையாளங்கள் ஏதுமில்லாததால், தமிழா்களின் மொழி, இன, தேச, பண்பாட்டு, வரலாற்று அடையாளங்களைத் திருடித் தன்வயப்படுத்துகிற சூழ்ச்சியை மேற்கொள்கின்றனா். தற்போதைய செயல்பாடும் அதன் நீட்சியேயாகும். மொத்தத்தில், தமிழா்களை திராவிடா்கள் எனத் தவறாக அடையாளப்படுத்தியது ஒரு வரலாற்றுப்பேரவலமாகும். எனவே, தமிழ் நூல்களின் தொகுப்பிற்கு, ‘தமிழ்க்களஞ்சியம்’ என்றே திமுக அரசு பெயா் சூட்டவேண்டுமென வலியுறுத்துகிறேன்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp