அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை ஈயமும், பித்தளையுமாக இருந்ததாக சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் பரந்தாமன் செவ்வாய்க்கிழமை விமரிசித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் பேசிய எழும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் பரந்தாமன், மின்சாரத்துறையை அதிமுக கையாண்டது குறித்து முன்னாள் அமைச்சர் தங்கமணியை மறைமுகமாக விமரிசித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், தங்கமும், மணியுமாக இருக்க வேண்டிய மின்சாரத்துறையானது அதிமுக ஆட்சியில் ஈயமும், பித்தளையுமாக இருந்தது என்றார்.
இதையும் படிக்க | அரசு ஊழியர்களுக்கான பயனுள்ள அறிவிப்புகள்