சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தும்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஏன் நடத்த முடியாது என தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், நகர்ப்புற தேர்தல் நடத்துவது குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நகர்ப்புற தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.
இதையும் படிக்க | இந்தியாவில் ஒரேநாளில் 30,256 பேருக்கு கரோனா; 295 பேர் பலி
அப்போது நீதிபதிகள் பேசுகையில், “நாடாளுமன்றம், சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தும்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாதா?. தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 7 மாதங்கள் அவகாசம் வழங்க முடியாது. காலவகாசம் தொடர்பாக இரண்டு நாள்களில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்” என்றனர்.