இந்தியாவில் ஒரேநாளில் 30,256 பேருக்கு கரோனா; 295 பேர் பலி
இந்தியாவில் இன்று மேலும் 30,256 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்தியாவில் இன்று மேலும் 30,256 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30,256 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3.34 கோடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 295 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 4,45,133 ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவிலிருந்து இன்று 43,938 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 3,27,15,105 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 3,18,181 ஆக உள்ளது. இதுவரை 80.85 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் 37,78,296 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க- காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தமிழகத்தை பொறுத்தவரை 4,30,03,500 கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 11,77,607 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 55,36,21,766 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...