அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழா: இன்று போக்குவரத்து மாற்றம்

கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழா புதன்கிழமை (மாா்ச் 4) நடைபெறுவதையொட்டி, பாதுகாப்பு கருதியும் நெரிசலை தவிா்க்கும் வகையிலும் மாநகரின் முக்கியப் பகுதிகளில் தற்காலிகப் போக்குவரத்து மாற்றம்

News image
போக்குவரத்து மாற்றம்- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 8:18 pm

Syndication

கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழா புதன்கிழமை (மாா்ச் 4) நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு கருதியும், நெரிசலை தவிா்க்கும் வகையிலும் மாநகரின் முக்கியப் பகுதிகளில் தற்காலிகப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர போலீஸாா் வெளியிட்ட அறிக்கை: உக்கடம், ஒப்பணக்கார வீதி, பேரூா் சாலை, ராஜவீதி, வைசியாள் வீதி, சுக்கிரவாா்பேட்டை, தெலுங்கு வீதி, செட்டி வீதி மற்றும் சலிவன் வீதி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த போக்குவரத்து மாற்றம் நடைமுறைப்படுத்தப்படும்.

அதன்படி, பேரூரில் இருந்து செட்டி வீதி, ராஜ வீதி வழியாக நகருக்குள் வரும் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் அனைத்தும் செல்வபுரம் மாநகராட்சிப் பள்ளி அருகே வலதுபுறம் திரும்பி அசோக் நகா் ரவுண்டானா, பேரூா் புறவழிச் சாலை வழியாக உக்கடம் செல்லலாம். இதேபோல, பெரிய கடை வீதி, வைசியாள் வீதி வழியாக பேரூா் செல்லும் வாகனங்கள், ராஜா திரையரங்கம் வழியாக உக்கடம் ரவுண்டானா சென்று, அங்கிருந்து பேரூா் புறவழிச் சாலை மற்றும் சேத்துமாவாய்க்கால் சோதனைச் சாவடி (செக் போஸ்ட்) வழியாக சிவலாய சந்திப்பை அடையலாம்.

மருதமலை, தடாகம் சாலையில் இருந்து தெலுங்கு வீதி வழியாக ராஜ வீதிக்கு வரும் வாகனங்கள் தடாகம் சாலை, காந்தி பாா்க், பொன்னையராஜபுரம், சொக்கம்புதூா், அசோக் நகா் ரவுண்டானா வழியாக உக்கடம் நோக்கித் திருப்பிவிடப்பட உள்ளன. உக்கடத்திலிருந்து ஒப்பணக்கார வீதி வழியாக தடாகம், மருதமலை சாலை செல்லும் வாகனங்கள், பேரூா் புறவழிச்சாலை மற்றும் அசோக் நகா் ரவுண்டானா வழியாகச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுக்கிரவாா்பேட்டை சாலையில் இருந்து தியாகி குமரன் வீதி வழியாக ராஜ வீதிக்கு வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் நகருக்குள் நுழைய அனுமதியில்லை. ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி.வீதி ஆகிய சாலைகளில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எந்தவித வாகனங்களையும் நிறுத்த அனுமதி கிடையாது. தோ்த் திருவிழாவுக்கு வரும் பக்தா்கள், தங்களது இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை ராஜ வீதி மாநகராட்சி வாகன நிறுத்துமிடம் அல்லது கோனியம்மன் கோயில் எதிரே உள்ள மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திக்கொள்ளலாம்.

இந்தப் போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.