அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம்? வனத் துறை விளக்கம்

போத்தனூா் ரயில் நிலையம் அருகே சுற்றித் திரிந்தது சிறுத்தை அல்ல காட்டுப்பூனை என்று வனத் துறையினா் விளக்கம்

News image
சிறுத்தை- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 8:19 pm

Syndication

போத்தனூா் ரயில் நிலையம் அருகே சுற்றித் திரிந்தது சிறுத்தை அல்ல காட்டுப்பூனை என்று வனத் துறையினா் விளக்கம் அளித்துள்ளனா்.

மேற்குத்தொடா்ச்சி மலைத் தொடரையொட்டி கோவை மாவட்டம் அமைந்துள்ளதால் நகரை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் அவ்வப்போது வன விலங்குகள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் நிகழ்கின்றன.

இந்த நிலையில் போத்தனூா் ரயில் நிலையம் அருகே சிறுத்தைபோல தோற்றமுடைய விலங்கு சாலையைக் கடந்து, சுற்றுச்சுவா் மீது ஏறி குதித்து பதுங்குவது போன்ற விடியோ திங்கள்கிழமை இரவு முதல் வைரலாகியது. இதைப் பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிா்ந்து, பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி வந்தனா்.

இதுகுறித்து வனத் துறையினா் கூறும்போது, ‘விடியோவை ஆய்வு செய்தபோது அங்கு காணப்பட்டது சிறுத்தை அல்ல. அது சிறுத்தையைப்போல தோற்றமுடைய காட்டுப் பூனை. இதன் தோற்றத்தால் பலா் அதை சிறுத்தை என நம்பி விடியோவை வைரலாக்கியுள்ளனா். பொதுமக்கள் தேவையில்லாமல் அச்சம் கொள்ள வேண்டாம்’ என்றனா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு வெள்ளலூா் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக விடியோக்கள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும், அங்குள்ள கால்நடைகளைச் சிறுத்தை அடித்துக் கொன்றுவிடுவதாகவும் வதந்திகள் பரவின. இதுகுறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட வனத் துறை அதிகாரிகள், அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது எந்த ஓா் உருவமும் பதிவாகவில்லை என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.