திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூடப்பட்ட கோயில் 10 மணி நேரத்திற்குப் பின் மீண்டும் திறப்பு

News image

திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு - Center-Center-Vijayawada

Updated On :3 மார்ச் 2026, 9:25 pm IST

திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோயிலில் சந்திர கிரகணத்தையொட்டி மூடப்பட்ட கோயில், சுமார் 10 மணி நேரத்திற்குப்பின் மீண்டும் திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கோயில்கள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) சந்திர கிரகணம் காரணமாக மூடப்பட்டன. பிற்பகல் 3.20 மணி முதல் மாலை 6.47 மணி வரை சந்திர கிரகணம் ஏற்பட்டது. வைகானச ஆகம விதிப்படி கிரகண நேரத்திற்கு 6 மணி நேரம் முன்பு கோயில் கதவுகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி காலை 9 மணிக்கு தேவஸ்தான கோயில்களின் கதவுகள் மூடப்பட்டன.

கிரகணம் முடிந்து சுத்தி செய்யப்பட்டு, மீண்டும் இரவு 8.30 மணியளவில் திருமலை ஏழுமலையான் கோயிலில் நடை திறக்கப்பட்டது. அதன்பின், பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

Summary

Tirumala reopens after lunar eclipse: Devotees allowed!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.