திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோயிலில் சந்திர கிரகணத்தையொட்டி மூடப்பட்ட கோயில், சுமார் 10 மணி நேரத்திற்குப்பின் மீண்டும் திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கோயில்கள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) சந்திர கிரகணம் காரணமாக மூடப்பட்டன. பிற்பகல் 3.20 மணி முதல் மாலை 6.47 மணி வரை சந்திர கிரகணம் ஏற்பட்டது. வைகானச ஆகம விதிப்படி கிரகண நேரத்திற்கு 6 மணி நேரம் முன்பு கோயில் கதவுகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி காலை 9 மணிக்கு தேவஸ்தான கோயில்களின் கதவுகள் மூடப்பட்டன.
கிரகணம் முடிந்து சுத்தி செய்யப்பட்டு, மீண்டும் இரவு 8.30 மணியளவில் திருமலை ஏழுமலையான் கோயிலில் நடை திறக்கப்பட்டது. அதன்பின், பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
Summary
Tirumala reopens after lunar eclipse: Devotees allowed!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



