/

கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!

News image

பள்ளிகள் திறப்பு

Updated On :26 மே 2026, 5:27 pm IST

சென்னை : தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-இல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து, ஏற்கெனவே திட்டமிட்டடிருந்தபடி 4 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது.

முன்னதாக, தமிழகத்தில் நிகழாண்டு ஏப். 23-இல் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றதால் அதற்கு முன்னதாக மாணவா்களுக்கு தோ்வுகளை நடத்தி விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து 1 முதல் 9-ஆம் வரையிலான வகுப்புகளுக்கு ஏப். 17-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. ஜூன் 1-இல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆயினும், 1 - 3 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 4-இல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வெய்யிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை மாற்றக்கோரி பல தரப்பிடமிருந்தும் அரசுக்கு கோரிக்கை வலுத்தது. இதைத் தொடர்ந்து, வெய்யில் தாக்கத்தின் நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையத்திடம் அறிக்கை கேட்கப்பட்டு அந்த அறிக்கையின் அடிப்படையில் முதல்வரிடம் கலந்து பேசி பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து வியாழக்கிழமை (ஜூன் 4-இல்) பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு இன்று (மே 26) மாலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Summary

schools will reopen on June 4, following the conclusion of the summer holidays.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.