ஹைதராபாத் : தெலங்கானாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நடைமுறை ஜூன் 15 முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் பட்டியல் தயாரிப்பு பணி ஜூன் 15 - 24 வரை நடைபெறும் என்றும் ஜூன் 25 - ஜூலை 24 வரை வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப்படும் என்றும் தெலங்கானா தலைமை தேர்தல் அதிகாரி சி. சுதர்ஷன் ரெட்டி சனிக்கிழமை(மே 16) தெரிவித்தார்.
மேற்கண்ட பணிகளில் சுமார் 35,000 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) மாநிலமெங்கிலும் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, ஜூலை 31 - ஆகஸ்ட் 30 வரை வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டு ஆட்சேபனைகள் இருப்பின் கேட்கப்படும் என்றும் இறுதி வாக்காளர் பட்டியல் அக்டோபர் 1-இல் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, எஸ்ஐஆர் நடவடிக்கையானது ஒன்றிணைந்த ஆந்திர பிரதேச மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன், கடந்த 2002-இல் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 23 ஆண்டுகளுக்குப் பின் தெலங்கானா பகுதிகளில் மீண்டும் 2026-இல் எஸ்ஐஆர் நடைபெற உள்ளது.
Summary
SIR to begin in Telangana from June 15
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எந்த கோயிலில் என்ன விசேஷம்? கருடசேவை முதல் தீர்த்தவாரி வரை!

ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு!

கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடித் தடை காலம்!

ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம்! கடலூா் ஆட்சியா் அறிவிப்பு!!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

