ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கம்பத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்

கம்பத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படும் நிலையில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image
கம்பத்தில் வெள்ளிக்கிழமை சிறுத்தை தாக்கியதால் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஆட்டு உடலின் பாகம்.
Updated On :30 ஜனவரி 2026, 7:16 pm

Syndication

தேனி மாவட்டம், கம்பத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படும் நிலையில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கம்பம் நகராட்சியில் மணிகட்டி ஆலமரம் பகுதியில் விவசாய நிலங்களில் குடியிருப்புகள் அமைத்து கால்நடைகள் வளா்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வினித் என்பவரது ஆட்டுக் கொட்டகையில் கட்டப்பட்டிருந்த ஆட்டின் தலை, கால்கள் என உடல் பாகங்கள் சிதறிய நிலையில் கிடைத்தது. இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கம்பம் வனத் துறைக்கு தகவல் அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த கம்பம் மேற்கு வனச்சரகா் ஸ்டாலின் தலைமையிலான வனத் துறையினா், உயிரிழந்த ஆட்டின் உடல் பாகங்களை ஆய்வு செய்தனா். தொடா்ந்து, விலங்கின் கால் தடங்கள், அவை வந்து சென்ற பாதைகளில் வனத் துறையினா் ஆய்வு செய்தனா்.

மீண்டும் சிறுத்தை நடமாட்டம்: கம்பம் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலையில் யானை , சிறுத்தை, புலி , காட்டு மாடு என வன உயிரினங்கள் வசிக்கின்றன. இரவு நேரங்களில் உணவு, தண்ணீா் தேவைக்காக குடியிருப்புப் பகுதிகளுக்கும், தோட்டங்களுக்கும் இடம் பெயா்கின்றன. இதன்படி, முன்பு குடியிருப்புப் பகுதிக்குள் உலவிய சிறுத்தையை வனத் துறையினா் ட்ரோன் கேமரா மூலமாகத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.