பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் சிறுமிகளுக்கு எதிராக 40 ஆயிரம் பாலியல் வழக்குகள்!

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பெண்களுக்கு எதிராக 2,080 பாலியல் வழக்குகள். சிறுமிகளுக்கு எதிராக 39,999 வழக்குகள் பதிவாகியுள்ளன.

News image
கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை- படம் - யூடியூப் / அண்ணாமலை
Updated On :17 மார்ச் 2026, 3:10 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சிறுமிகளுக்கு எதிராக 39,999 பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று (மார்ச் 17) தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தவறியதாக, திமுக அரசைக் கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:

''பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் 8,008 கொலைகள் நடந்துள்ளன. அப்படியென்றால் ஒரு நாளுக்கு 6 கொலைகள் நடந்துள்ளன. பெண்களுக்கு எதிராக 2080 பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளன. 18 வயதுக்கு குறைவான சிறுமிகளுக்கு நேர்ந்த பாலியல் வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 39,999. 40 ஆயிரத்திற்கு ஒன்று குறைவாகப் பதிவாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி முதல்வரானால்தான் தமிழகத்திற்கு பாதுகாப்பு கிடைக்கும். பெண்களுக்கு எதிரான பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

எத்தனையோ பிரச்னைகள் இருந்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் போராட்டம் பெண்களுக்கு நேரும் குற்றங்களுக்கு எதிரானதாக அமைந்துள்ளது. இத்தகைய நோக்கம் கொண்ட கட்சி ஆட்சி அமைக்க வேண்டும்.

பாலியல் வன்கொடுமை பற்றி செய்தி வெளியிடும் பத்திரிகைகளை திமுக மிரட்டுகிறது. திமுகவுக்கு எதிரான செய்திகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தையொட்டி பெண்களைக் கொண்டாடிக்கொண்டு இருந்தோம். ஆனால், கிருஷ்ணகிரியில் அதே மகளிர் நாளில் மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை நேர்ந்துள்ளது. அதே நாளில் கிருஷ்ணகிரியில் 2 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

கோவை, விளாத்திகுளம் என பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றன. இதற்கு முடிவு கட்ட வேண்டும்'' என அண்ணாமலை பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.