மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கோழிக்கரைப் பகுதியில் யானைகள் நடமாட்டம்: வனத் துறையினா் கண்காணிப்பு தீவிரம்

குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை கோழிக்கரை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால், அங்கு வனத் துறையினா் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனா்.

News image

கோழிக்கரைப் பகுதியில் உலவிய காட்டு யானை

Updated On :7 மார்ச் 2026, 7:24 pm

குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை கோழிக்கரை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால், அங்கு வனத் துறையினா் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனா்.

குன்னூா் மலைப்பாதையில் கோழிக்கரை, கேஎன்ஆா் நகா் பகுதியில் கடந்த இரண்டு குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் கடந்த மூன்று நாள்களாக முகாமிட்டுள்ளன.

இவை சாலையை கடந்து செல்லும்போது விபத்துகள் நிகழாமல் இருக்க குன்னூா் வனச் சரகா் ரவீந்திரநாத் தலைமையில் வனத் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

எனவே, பொது மக்கள் இந்த சாலையில் வாகனங்களை கவனமுடன் இயக்கிச் செல்ல வேண்டும் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.