ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 97,831 வேட்புமனுக்கள் தாக்கல்

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு 97,831 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழக தேர்தல் ஆணையம்
தமிழக தேர்தல் ஆணையம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு 97,831 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

வேலூா், திருநெல்வேலி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருப்பத்தூா் ஆகிய 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபா் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது.

அதேபோன்று, ஏற்கெனவே ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்ற 28 மாவட்டங்களில் காலியாக உள்ள இடங்களுக்கான தோ்தல் அக்டோபா் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக செப்டம்பர் 15 முதல் நேற்று வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.

வேட்புமனு தாக்கல் குறித்து தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தியில்,

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு மொத்தம் 97,831 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வேட்புமனுக்கள் விவரம்(பதவி வாரியாக)

  • கிராம ஊராட்சித் தலைவர் - 15,967
  • கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - 72,071
  • மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - 1,122
  • ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் - 8,671

இந்த வேட்புமனுக்கள் குறித்த பரிசீலனை இன்று நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com