ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு 97,831 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
வேலூா், திருநெல்வேலி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருப்பத்தூா் ஆகிய 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபா் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது.
அதேபோன்று, ஏற்கெனவே ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்ற 28 மாவட்டங்களில் காலியாக உள்ள இடங்களுக்கான தோ்தல் அக்டோபா் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக செப்டம்பர் 15 முதல் நேற்று வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.
வேட்புமனு தாக்கல் குறித்து தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தியில்,
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு மொத்தம் 97,831 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வேட்புமனுக்கள் விவரம்(பதவி வாரியாக)
இந்த வேட்புமனுக்கள் குறித்த பரிசீலனை இன்று நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.