சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பினை, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அமைப்பு தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளது.
அந்த தகவலில், சனிக்கிழமை மாலை 3.50 மணி நிலவரப்படி, அடுத்த இரண்டு மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர், தருமபுரி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. கொடூரத்தின் உச்சம்: மனைவி தூக்கிட்டுத் தற்கொலை; விடியோ எடுத்த கணவன்