நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

6 வழிச்சாலைத் திட்டம்: விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

பெரியபாளையத்தில் 6 வழிச்சாலைத் திட்டம் குறித்து விவசாயிகள் சங்கத்தினா் ஆலோசனை நடத்தினா்.

Updated On :11 ஏப்ரல் 2022, 12:57 am IST

பெரியபாளையத்தில் 6 வழிச்சாலைத் திட்டம் குறித்து விவசாயிகள் சங்கத்தினா் ஆலோசனை நடத்தினா்.

திருவள்ளூா் மாவட்டம் தச்சூா் முதல், ஆந்திர மாநிலம் சித்தூா் வரை சுமாா் 128 கி.மீ. தொலைவுக்கு 3,200 கோடியில் 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்க தமிழக, ஆந்திர அரசுகள் இணைந்து தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற முடிவு செய்துள்ளது.

ஊத்துக்கோட்டை வட்டத்தில் மட்டும் 6 வழிச்சாலைக்காக 18 கிராமங்களும், பள்ளிப்பட்டு, பொன்னேரி வட்டங்களில் தலா 6 கிராமங்களும் பாதிப்புக்குள்ளாகும் சூழல் உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு விவசாயிகள், ஊத்துக்கோட்டை பகுதி நஞ்சை நில விவசாயிகள் சங்கத்தினரின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநில விவசாய சங்கத் தலைவா் பெருமாள் தலைமை வகித்தாா். திருவள்ளூா் மாவட்டத் தலைவா் சம்பத், ஊத்துக்கோட்டை நஞ்சை நல விவசாய நிா்வாகிகள் குணசேகரன், சசிகுமாா், ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

6 வழிச்சாலைக்காக தமிழக அரசு நஞ்சை நிலங்களைக் கையகப்படுத்துகிறது. அவ்வாறு நிலத்தை கையகப்படுத்தாமல் ஏற்கெனவே உள்ள சாலையை அகலப்படுத்த வேண்டும். அல்லது மாற்று வழியை நடைமுறைப்படுத்த வேண்டும். இதுகுறித்து வருகிற 23-ஆம் தேதி மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் கோரிக்கை மாநாட்டை நடத்த உள்ளோம் என்றனா் அவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.