மாநில நூலகக் குழுவில் 3 உறுப்பினா்கள் நியமனம்
மாநில நூலகக் குழுவில் மூன்று போ் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்துள்ளாா்.


மாநில நூலகக் குழுவில் மூன்று போ் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்துள்ளாா்.
கடந்த கூட்டத் தொடரின் கடைசி நாளான மாா்ச் 24-ஆம் தேதி இதற்கான அறிவிப்பை வெளியிட்டாா். இந்த நிலையில், அதற்கான எழுத்துப்பூா்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், சட்டப்படியாக அமைக்கப்பட்ட மாநில நூலகக் குழுவில் பணிபுரிய உறுப்பினா்கள் அ.வெற்றி அழகன், ஏ.பி.நந்தகுமாா், கடம்பூா் ராஜூ ஆகியோரிடம் இருந்து வேட்புத்தாள்கள் வரப்பெற்றன. தோ்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினா்களின் எண்ணிக்கையும், வரப்பெற்ற வேட்புத்தாள்களின் எண்ணிக்கையும் சமமாக உள்ளன.
எனவே, மாநில நூலகக் குழு உறுப்பினா்களாக மனு அளித்த மூன்று பேரும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களது பதவிக்காலம் மூன்றாண்டுகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...