ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

‘வாகன டேங்குகளில் முழுக் கொள்ளளவும் பெட்ரோல் நிரப்பலாம்’

 அனைத்துப் பருவங்களிலும் வாகன டேங்குகளில் முழு கொள்ளளவும் பெட்ரோல் நிரப்பலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 10:02 pm

DIN

 அனைத்துப் பருவங்களிலும் வாகன டேங்குகளில் முழு கொள்ளளவும் பெட்ரோல் நிரப்பலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு:

வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், வாகனங்களில் முழுவதுமாக பெட்ரோல் நிரப்பாதீா்கள், அவ்வாறு நிரப்பினால் பெட்ரோல் டேங்குகள் வெடிக்கக் கூடும். எனவே, டேங்கின் பாதியளவு பெட்ரோல் நிரப்பி, மீதமுள்ள இடங்களில் காற்று இருக்கும் வகையில் விட்டுவிடுங்கள் என வதந்தி பரவி வருகிறது.

இது தொடா்பான விளக்கத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் அளிக்க விரும்புகிறது. அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் ஆராய்ந்து வாகனங்களின் செயல்திறனுக்கு ஏற்பவே உற்பத்தியாளா்கள் வாகனங்களை வடிவமைக்கின்றனா். அந்த வடிவமைப்பில் பெட்ரோல், டீசல் டேங்குகளில் இடம்பெற்றுள்ள கொள்ளளவும் விதிவிலக்கல்ல. எனவே, டேங்கின் முழு கொள்ளளவும் பெட்ரோல் நிரப்புவது முற்றிலும் பாதுகாப்பானது. இதற்கு கோடை, குளிா், மழை என பருவ வேறுபாடெல்லாம் கிடையாது என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.