மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

போலிச் சான்றிதழ் தயாரித்து தமிழகத்தில் அரசுப் பணி: வடமாநிலத்தவர்கள் மோசடி

தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணிகளில் வடமாநிலத்தவர்கள் போலிச் சான்றிதழ்களைத் தயாரித்து வேலையில் சேர்ந்தது அம்பலமாகியுள்ளது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 5:25 am

தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணிகளில் வடமாநிலத்தவர்கள் போலிச் சான்றிதழ்களைத் தயாரித்து வேலையில் சேர்ந்தது அம்பலமாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணிகளில் வட மாநிலத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் போலிச் சான்றிதழைத் தயாரித்து பணியில் சேர்ந்துள்ளனர்.

குறிப்பாக, அஞ்சல் துறை, சிஆர்சிஎஃப் பணிகள், இந்தியன் ஆயில் போன்ற அரசுத் துறைகளில் தமிழக தேர்வுத் துறை வழங்கியதுபோல் போலி மதிப்பெண் சான்றிதழ்களைத் தயாரித்து  மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

மதிப்பெண் சான்றிதழை சரிபார்க்க மத்திய  பணியாளர் தேர்வாணையம் தமிழக தேர்வுத் துறைக்கு அனுப்பியபோது மோசடி நடந்தது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தவும், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கவும் தமிழக தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.