அம்பேத்கருக்கு மரியாதை: சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றார் முதல்வர் ஸ்டாலின்

அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் சமத்துவ நாளுக்கான உறுதிமொழியை வியாழக்கிழமை ஏற்றுக் கொண்டார்.
அம்பேத்கருக்கு மரியாதை: சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றார் முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் சமத்துவ நாளுக்கான உறுதிமொழியை வியாழக்கிழமை ஏற்றுக் கொண்டார்.

நாடு முழுவதும் அம்பேத்கரின் 132-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அவரின் பிறந்த நாளை சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்று நேற்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இந்நிலையில், சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின், சமத்துவ நாளுக்கான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களும் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com