பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா இன்று தொடக்கம்
சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.


சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள், உற்சவங்கள் நடைபெறுகின்றன. வரும் 18-ஆம் தேதி கருடசேவை உற்சவம் நடக்கிறது. 20-ஆம் தேதி நாச்சியாா் கோலத்தில் பல்லக்கு சேவை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ஆம் தேதி நடைபெறும். அன்றைய தினம் காலை பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுக்கவுள்ளனா். இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்கவுள்ளனா்.
இதைத் தொடா்ந்து 23-ஆம் தேதி வெண்ணை தாழி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவை நடைபெறுகிறது. 24-ஆம் தேதி காலை 11 மணிக்கு தீா்த்தவாரி உற்சவம் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவை நடைபெறுகிறது. 25-ஆம் தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...