அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பருவ மழை இயல்பாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை இயல்பாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 8:15 pm

DIN

நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை இயல்பாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

நாட்டின் பெரும் பகுதியில் மழைப் பொழிவு தரும் பருவமழையான தென்மேற்கு பருவமழை, ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பா் வரை பெய்யும். இதன் வாயிலாக, ஆண்டின் மொத்த மழையில் 75 சதவீதம் கிடைக்கிறது.

நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: ஜூன் முதல் செப்டம்பா் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழை நிகழாண்டில் இயல்பான அளவில் இருக்க வாய்ப்பு உள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் பருவமழை இயல்பான அளவிலும், வடக்கு, மத்திய இந்தியா, வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் இயல்பை விட அதிகமாகவும் இருக்கும்.

வடகிழக்கின் பல பகுதிகள், தென் பகுதிகளில் இயல்பை விட குறைவான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.