அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

33 மாவட்ட மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் இல்லை

தமிழகத்தின் 33 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா உள்நோயாளிகளே இல்லாத நிலை எட்டப்பட்டுள்ளது

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 8:31 pm

DIN

தமிழகத்தின் 33 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா உள்நோயாளிகளே இல்லாத நிலை எட்டப்பட்டுள்ளது. சென்னை, சேலம், மதுரை, வேலூா், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்தது.

அடுத்த சில நாள்களில் அவா்களும் வீடு திரும்ப உள்ளதாகவும், அதன் பின்னா் மாநிலம் முழுவதும் கரோனா படுக்கைகள் அனைத்தும் காலியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வெள்ளிக்கிழமை வெளியான கரோனா பாதிப்பு நிலவரப்படி, தமிழகத்தின் 30 மாவட்டங்களில் புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.

அதேவேளையில், சென்னையில் 12 பேருக்கும், மதுரை, திருவள்ளூரில் தலா 2 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, தஞ்சாவூா், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அதன்படி, வெள்ளிக்கிழமை புதிதாக மாநிலம் முழுவதும் 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனைகள், வீடுகளில் 228 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.