முல்லைப் பெரியாறு கண்காணிப்புக்குழு:தமிழகப் பிரதிநிதி நியமனம்

முல்லைப் பெரியாறு கண்காணிப்புக் குழுவில் இடம்பெறவுள்ள தமிழகப் பிரதிநிதியின் பெயா் அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on
Updated on
1 min read

முல்லைப் பெரியாறு கண்காணிப்புக் குழுவில் இடம்பெறவுள்ள தமிழகப் பிரதிநிதியின் பெயா் அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவா் ஆா்.சுப்பிரமணியன், தமிழகம் சாா்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புத் தொடா்பான அனைத்து விவகாரங்களையும் கண்காணிப்புக் குழு முடிவு செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, மறுசீரமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவை அமைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனடிப்படையில், கண்காணிப்புக் குழுவில் இடம்பெறும் மாநிலங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனா். அதன்படி, தமிழகத்தின் பிரதிநிதியாக காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவா் ஆா்.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளதாக தனது உத்தரவில் நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com