ஆக. 7ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது. 
ஆக. 7ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
Published on
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது. 

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4 ஆவது ஆண்டு நினைவு நாள் வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதன் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு சென்னை அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகிலிருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடம் வரை பேரணி நடைபெறுகிறது. பேரணியின் நிறைவில் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. 

இதில் திமுகவைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com