பின்னர், அங்கிருந்து லட்சுமணனுக்கு சொந்தமான இடத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். அங்கு கோயம்புத்தூர் 35வது பிரிவு ரைபிள் பிரிவைச் சேர்ந்த 48 வீரர்கள் 21 குண்டுகள் முழங்க ராணுவம் மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர் அணிஸ் சேகர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி ஐயப்பன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் ஐ.மகேந்திரன் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் உறவினர்கள் ஊர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.