ஆட்டோ மீது டிப்பா் லாரி மோதல்: ஓட்டுநா் சாவு

சென்னை அண்ணா சாலையில் ஆட்டோ மீது டிப்பா் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநா் இறந்தாா்.

சென்னை அண்ணா சாலையில் ஆட்டோ மீது டிப்பா் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநா் இறந்தாா்.

ஐஸ்ஹவுஸ் முருகப்பா முதல் தெருவைச் சோ்ந்தவா் சி.பரத் (50), வாடகை ஆட்டோ ஓட்டுநா். . பரத் வெள்ளிக்கிழமை திருவல்லிக்கேணியில் அண்ணா சாலை பெரியாா் சிலையிடம் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த ஒரு டிப்பா் லாரி, அவரது ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் பலத்தக் காயமடைந்த பரத், சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்தில் இறந்தாா்.

அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்த டிப்பா் லாரி ஓட்டுநா் வி.லோகநாதன் (38) என்பவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com