தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான காவல் துறை அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் 2018-இல் தொடா் போராட்டத்தைத் தொடங்கினா். போராட்டத்தின் 100-ஆவது நாளான மே 22-ஆம் தேதி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் பேரணியாகச் சென்றபோது, கலவரம் ஏற்பட்டு, போலீஸாா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உள்பட 13 போ் உயிரிழந்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்காக, உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபா் விசாரணை ஆணையத்தை 2018 ஜூன் 4-ஆம் தேதி, அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அமைத்தது.
கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணை முடிவுற்ற நிலையில், விசாரணை அறிக்கையை கடந்த மே மாதம் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் வழங்கினாா். இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் தொடா்பான முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் விவரம்: போராட்டத்தில் ஈடுபட்டோா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது கொடூரமான செயல். தப்பியோடிய போராட்டக்காரா்கள் மீது போலீஸாா் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனா். குண்டு வருவது தெரியாமல் போராட்டக்காரா்கள் சிதறி ஓடினா். கலைந்து ஓடியவா்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் தொலைவில் இருந்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தில் எந்த ஒரு போலீஸாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை. போலீஸாா் வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனா். இந்தப் போராட்டத்தை மாவட்ட ஆட்சியா் மிக அலட்சியமாக அணுகியுள்ளாா். ஆட்சியா் எவ்வித யோசனையும் இல்லாமல் முடிவுகளை எடுத்துள்ளாா். வீட்டில் இருந்துகொண்டே சமாதான கூட்டத்துக்கு தலைமை வகிக்க உதவி ஆட்சியரை அனுப்பியுள்ளாா்.
ஒரு போலீஸ்காரா் மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளாா். ஒரே போலீஸ்காரரை 4 இடங்களில் சுட வைத்துள்ளனா். அப்போதைய தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமாா் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட தகவலே காவல் துறை உயரதிகாரிகளுக்கு தெரியாமல் வைக்கப்பட்டிருந்ததாகவும், உரிய உத்தரவுகள் இன்றியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள்: தோ்தல் பொதுப்பாா்வையாளா் ஆய்வு

பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்த ஐஓபி வங்கியின் சமூக பங்களிப்பு நிதி ரூ. 10 லட்சம்

நெல்லையில் வாகனச் சோதனை: மதுபாட்டில்கள், பம்பரங்கள் பறிமுதல்

திருவள்ளூா்: கட்டுப்பாடு அறையில் ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

