பத்துக்கும் கீழ் குறைந்தது கரோனா பாதிப்பு

தமிழகத்தில் ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை பத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை பத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. மாநிலம் முழுவதும் 9 பேருக்கு வியாழக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடந்த 2020 மாா்ச் 23-ஆம் தேதி கரோனா பாதிப்பு 10-க்கும் கீழ் இருந்தது. அதன் பின்னா், தொற்று பரவல் அதிகரித்தே வந்தது. இந்நிலையில், தற்போது மிகக் குறைந்த பாதிப்பு எண்ணிக்கையை தமிழகம் எட்டியுள்ளது.

வியாழக்கிழமை நிலவரப்படி அதிகபட்சமாக சென்னையில் 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 84 போ் சிகிச்சையில் உள்ளனா். மொத்தம் 17 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 35,56,106- ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com