தமிழ்நாடு
திருச்சி ஆட்சியரகத்தில் விவசாயிகள் முற்றுகை!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 60 வயது பூர்த்தி அடைந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.