வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், பக்தர்கள் குறைந்த அளவிலேயே அனுமதிக்கப்பட்டனர்.

இந்தாண்டு கரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக சில விரைவு ரயில்கள் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் நின்று செல்ல தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

ஜனவரி 2ஆம் தேதி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வையொட்டி, ஜனவரி 1 முதல் 3 வரை சென்னை எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில்(12635) மாலை 6.08 முதல் 6.10 வரையும், மதுரை - சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில்(12636) காலை 9.38 முதல் 9.40 வரையும் நின்று செல்லும்.

அதேபோல், கொல்லம் - சென்னை எழும்பூர்(16102) இரவு 9.38 முதல் 9.40 வரை,  சென்னை எழும்பூர் - கொல்லம்(16101) இரவு 9.18 முதல் 9.20 வரையிலும் நிற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com