கடலூரில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டிடிஎஃப் வாசன் என்பவர் இருசக்கர வாகன பயணத்தின் மூலம் யூடியூப்பில் பிரபலமானவராக அறியப்படுகிறார். யூடியூப்பில் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அதிவேகமாக வாகனம் இயக்கிய புகாரின் அடிப்படையில் காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டார்.
இதையும் படிக்க | ஜம்மு காஷ்மீரில் பண்டிட்டுகள் கொலை: மத்திய இணையமைச்சர் பதில்
இந்நிலையில் கடலூர் புதுப்பாளையம் பகுதிக்கு புதன்கிழமை வருகை தந்த அவரைக் காண ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் டிடிஎஃப் வாசன் தனிமைப்படுத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
கூட்டம் கலைந்த பிறகு அவரை பாதுகாப்பாக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதன் அடிப்படையில் டிடிஎஃப் வாசன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.