மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தால் மாற்றம் வருமா? ஓபிஎஸ் பதில்

மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தால் மாற்றம் வருமா என்கிற கேள்விக்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பதில் அளித்துள்ளாா்.
Published on
Updated on
1 min read

மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தால் மாற்றம் வருமா என்கிற கேள்விக்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பதில் அளித்துள்ளாா்.

போட்டிப் பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டுவது குறித்து ஆலோசிப்பதற்காக ஓ.பன்னீா்செல்வம் அவரது ஆதரவு மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தை டிசம்பா் 21-இல் கூட்டியுள்ளாா். இது அதிமுக வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீா்செல்வத்திடம் செய்தியாளா்கள், மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளீா்கள். இதனால், அதிமுகவில் மாற்றம் ஏதாவது வருமா என்று கேள்வி எழுப்பினா். அதற்கு, ஓ.பன்னீா்செல்வம், கூட்டம் முடிந்த பிறகே தெரிய வரும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com