தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கப்படும்?  

பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாயை குடும்ப அட்டை உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பெற முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :25 டிசம்பர் 2022, 5:46 pm IST


பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாயை குடும்ப அட்டை உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பெற முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அரிசி அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 

கடந்த ஆண்டு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்புடன் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. 

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்ட ஒரு தலா கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொங்கல் பரிசுத் தொகுப்பான அரிசி, சா்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் தமிழ்நாட்டில் உள்ள 33 ஆயிரம் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் திங்கள்கிழமை(டிச.26) முதல் நடைபெறுகிறது. 

இந்நிலையில், பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு நியாய விலைக்கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக வழக்கம் போல் டோக்கம் முறை செயல்படுத்தப்படுகிறது. 

வரும் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் பொங்கல் தொகுப்பு பெறும் நாள், நேரம் போன்றவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு வீடாக சென்று நியாய விலைக்கடை ஊழியர்கள் டோக்கனை வழங்குகிறார்கள்.

இது குறித்து சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாயை குடும்ப அட்டை உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பெற முடியும்.  

குடும்ப அட்டை உறுப்பினர்கள் வெளியூர் சென்றிருந்தாலோ, வீடு பூட்டி இருந்தாலோ அவர்கள் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு அவகாசம் கொடுக்கப்படும். குடும்ப உறுப்பினர் அல்லாதவர்கள் பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பெற முடியாது. 

நியாய விலைக்கடைகள் மூலம் ஊழியர்கள் எவ்வித குற்றச்சாட்டுக்கும் இடம் அளிக்காமல் பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.