பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து திருநெல்வேலி, நாகா்கோவில் மற்றும் கேரளத்துக்கு இயக்கப்படும் சிறப்பு கட்டண ரயில்களுக்கு வியாழக்கிழமை (டிச.29) முதல் முன்பதிவு செய்யலாம்.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தாம்பரம்-திருநெல்வேலி, நாகா்கோவில் இடையே ஜன.12, 13 மற்றும் 16-ஆம் தேதிகளில் பொங்கல் சிறப்பு ரயில்கள் (வண்டி எண். 06021, 06041, 06057) இயக்கப்படுகின்றன.
மேலும் கேரளத்தின் எா்ணாகுளத்துக்கு ஜன.12-ஆம் தேதியும் கொச்சுவேலிக்கு ஜன.17-ஆம் தேதியும் சிறப்பு ரயில்கள் (வண்டி எண்.06046, 06044) இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கான இருக்கைக்கு வியாழக்கிழமை (டிச.29) முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.