உதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

செங்கல்பட்டில் மதுக்கடைக்கு எதிராக சாலை மறியல் போராட்டம்

செங்கல்பட்டு அருகே அரசு மதுபானக் கடை இருந்ததால் புதன்கிழமை கிராம பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:42 pm IST

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே அரசு மதுபானக் கடை இருந்ததால் புதன்கிழமை கிராம பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Story image

செங்கல்பட்டு அருகே மேலமையூர் பகுதியில் புதன்கிழமை புதிதாக அரசு மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. மதுக்கடை திறக்கப்பட்டால் இளைஞர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். பள்ளி, கோயில்கள் அருகே மதுக்கடை திறக்கக் கூடாது எனக் கூறி மேலமையூர் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு - திருக்கழுகுன்றம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Story image

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் போராட்டம்  2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதனால் திருக்கழுகுன்றம் - செங்கல்பட்டு மாநில நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது.

Story image

செங்கல்பட்டு நகரில் மதுபான கடையால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மூன்று மதுபான கடையை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார் .

அதில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே இருந்த ஒரு கடை மட்டுமே மேலமையூர் பகுதியில் திறக்கப்பட்டதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. 

மீதமுள்ள இரண்டு மதுபான கடையும் செங்கல்பட்டு - திருக்கழுகுன்றம் சாலையில் திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து மூன்று அரசு மதுபான கடை ஒரு சாலையில் திறக்கப்பட இருப்பதால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.