சமத்துவத்தின் சிலை என்னும் இந்த அடையாளம், அனைவரையும் உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக நம் நாடு வளர்ச்சி பெறத் தற்போது மிகவும் தேவைப்படும் ஒன்றாகும். தமிழக முதல்வராகவும், திமுக தலைவராகவும் தன் வாழ்நாளெல்லாம் சமத்துவத்துக்காகப் பாடுபட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி, ராமானுஜரது வாழ்க்கையின் சாரத்தை எடுத்து சொல்லும் வகையில் ஒரு தொலைக்காட்சித் தொடருக்குக் கதை, வசனம் எழுதினார். அவரது இலக்கிய - திரைப் படைப்புகளில் இதுவே இறுதியானதாகும். அதே நேரத்தில் எந்நாளும் உயிர்ப்புடன் இருந்து அடுத்து வரும் தலைமுறைகளிடம், குறிப்பாக நம் நாட்டின் இளைஞர் திரளிடம் இராமானுஜர் என்னும் மாபெரும் சமூகச் சீர்திருத்தவாதியின் வாழ்வையும் பணிகளையும் கொண்டு செல்லும் படைப்பாக அது அமைந்திருக்கிறது.