ஊரடங்கு தளர்வு: பிப்.14ல் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக பிப்ரவரி 14ஆம் தேதி முதல் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 
முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின்

ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக பிப்ரவரி 14ஆம் தேதி முதல் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக கரோனா பரவல் அதிகரித்தது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜன.6-ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், கடந்த 9-ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். 

பின்னர் கரோனா பரவல் விகிதம் குறைந்து வருவதையடுத்து, இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் ஒருசில கரோனா கட்டுப்பாடுகள் இன்னும் அமலில் உள்ளன. 

இந்த நிலையில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக பிப்ரவரி 14ஆம் தேதி முதல் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தலைமைச் செயலகத்தில் மருத்துவத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com