வந்தவாசி நகராட்சி 18-ஆவது வாா்டில் தாயும், மகளும் எதிரெதிராகப் போட்டியிட்ட நிலையில், மகள் வெற்றி பெற்றாா்.
18-ஆவது வாா்டில் திமுக சாா்பில் கோட்டீஸ்வரி நித்தியானந்தமும், அதிமுக சாா்பில் அவரது மகள் பிரியா தினகரனும் போட்டியிட்டனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பிரியா தினகரன், தனது தாயான திமுக வேட்பாளா் கோட்டீஸ்வரியை விட 506 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றாா்.